திருத்தணி, ஜன. 22: தமிழ்நாடு அரசு போக்குவரத்து திருத்தணி கிளை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு விழாவையொட்டி போக்குவரத்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதற்கு திருத்தணி கிளை மேலாளர் முருகன் தலைமை தாங்கினார். உதவி மேலாளர் நடராஜன், உதவி பொறியாளர் ராஜராஜன் துவக்கிவைத்தனர். நிகழ்ச்சியில் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விளக்கினர். மேலும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கும், அரசு ஓட்டுநர்களுக்கும் வழங்கப்பட்டது.