நாட்டில் அமைதி நிலவ வேண்டி முஸ்லிம்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

தஞ்சை, ஜன. 22: தஞ்சை மாநகர ஜமா அத்துல் உலமா சபை சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் நோன்பு வைப்பதாக முடிவு செய்தனர். இதைதொடர்ந்து நேற்று ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், மாணவ மாணவிகள் ஒரு நாள் நோன்பு வைத்தனர். இவர்கள் அனைவரும் நேற்று அதிகாலையில் இருந்து தண்ணீர் அருந்தாமல் உணவு உட்கொள்ளாமல் மாலை வரை நோன்பிருந்தனர். நேற்று மாலை தஞ்சை ஆற்றங்கரை ஜீம்ஆ பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சொற்பொழிவு நடந்தது. இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள்கு நோன்பு திறந்தனர்.

Related Stories: