அமோக விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி தொட்டியம்பட்டியில் பொங்கல் விழா

பொன்னமராவதி, ஜன.22: பொன்னமராவதி அருகே தொட்டியம்பட்டி ஊராட்சி முத்தமிழ் நகர் முதலாம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு முத்தமிழ்நகர் தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் கீதாசோலையப்பன், லெட்சுணன், பொறியாளர் நாகராஜன், முத்தமிழ் பாசறை தலைவர் சந்திரன் ஆகியோர் பொங்கல் விழா பற்றியும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் பேசினார்கள். முன்னதாக செயலாளர் கணேசன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் ஆனந்த் நன்றி கூறினார்.

Related Stories: