கருங்கல், ஜன. 22: கருங்கல் அருகே உள்ள மங்கலக்குன்று புனித தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் தொழில் முனைவோருக்கான சிறந்த வாய்ப்புகள் என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் டேவிட் ராஜபோஸ் தலைமை வகித்தார். துறை தலைவி அருட்சகோதரி லீமாறோஸ் வரவேற்றார். மங்கலக்குன்று பங்குதந்தை பிரான்சிஸ் வின்சென்ட் வாழ்த்துரை வழங்கினார். துறை பேராசிரியர் வில்சன் கருத்தரங்கம் குறித்து பேசினார்.