ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் முதல் ரகம் கிலோ ரூ.35க்கு ஏலம்

க.பரமத்தி, ஜன. 22: கரூர் மாவட்டத்தில் இரு ஒன்றிய பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நேற்று முன்தினம் தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 1651கிலோ எடையுள்ள 7886 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் குறைந்த விலையாக ரூ.22, அதிக விலையாக ரூ.35க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.2 உயர்ந்து ஏலம் போனது.இதே போல கொப்பரை தேங்காய்க்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 525 மூட்டைகளில் 24799 கிலோ கொப்பரை தேங்காய்கள் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.101, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.104க்கு ஏலம் போனது. கடந்த வாரமும் இதே விலை தான்.

Related Stories: