திருச்சி, ஜன.21: பொருளாதார கணக்கெடுப்பில் மூதாதையர்களின் ஆவணங்கள் கேட்கப்படுவதால் பாரத பிரதமர், உள்துறை அமைச்சர் அவர்களுடைய பெற்றோர், தாத்தா பாட்டிகளின் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சம்சுதீன், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்.ஆர்.சி, என்பிஆர், சி.ஏ.ஏ சம்பந்தப்பட்டவர்களுடைய பெற்றோர்களின் பிறப்புச் சான்றிதழும் அவர்களுடைய மூதாதையர்களுடைய பிறப்புச் சான்றிதழில் கோரப்படுகின்றன.