பெரம்பலூர்,ஜன.21:கல்பாடியில் இயங்கிவரும் அரசு டாஸ் மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி, பெரம்ப லூர் கலெக்டர் அலுவலகத்தை கிராமப் பொதுமக்கள் முற்றுகையிட்டு நூத னமாகக் கும்பிடு போராட் டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்நிலையில் பெரம்பலூர் அருகேயுள்ள கல்பாடி கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை சிறுவர் பூங்கா முன்பு முற்றுகையிட்டு, தயவு செய்து டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்று ங்கள் எனக்கோரி கும்பிடு போராட்டம் நடத்தினர். பின்னர் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங் கிற்குச் சென்று கலெக்டர் சாந்தாவிடம் அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : நாங்கள் கல்பாடி கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் ஊருக்கு நடுவே அரசு டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று உள்ளது.பால்பண்ணை, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஆகியவற் றின் அருகேதான் இந்த அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. மேலும் மருத்துவமனை, நூலகம், நியாய விலைக் கடை போன்ற இடங்களுக்கு இவ் வழியே செல்வதால் போதுமான பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. அதைவிடப் பேரச்சமாக, எங்கள் ஊரில் உள்ள பள்ளி மாணவர்க ளும் இந்த மதுபானத்திற்கு அடிமையாக மாறி வருகின்றனர்.