புதுப்பட்டினம் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருக்கழுக்குன்றம், ஜன. 21: புதுப்பட்டினம் ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் வணிகர் சங்கம் சார்பில் புதுப்பட்டினம் ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுப்பட்டினத்தில் நடந்தது. புதுப்பட்டினம் வணிகர் சங்கத் தலைவர் காதர்உசேன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சம்சுகனி, ரவி, வெற்றி, பட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், புதுப்பட்டினம் ஊராட்சியில் பணிபுரியும் 45 துப்புரவு பணியாளர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி, சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. முடிவில் வணிகர் சங்க நிர்வாகி ஸ்ரீதர் நன்றி கூறினார்.

Related Stories: