கரூர், ஜன. 21: குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் குப்பைகள் மலைபோல குவிந்துள்ளது. கரூர் ஆண்டாங்கோயில்ரோடு பகுதி விரிவாக்கப் பகுதியாக உள்ளது. ஏராளமான குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள பகுதி. இங்கு போதுமான அளவில் குப்பை தொட்டிகள் இல்லை. குப்பை மேலாண்மை திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மேலும் ஒதுப்புறமாக சீத்தை முட்களை அவ்வப்போது தீ வைத்து எரிக்கின்றனர்.