ஆர்.எஸ்.மங்கலம், ஜன.20: திருப்பாலைக்குடி மெயின் ரோட்டின் நடுவில் உள்ள மின் கம்பத்தால் காத்திருக்கும் ஆபத்தால், மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள திருப்பாலைக்குடியில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பிரிந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையின் நடுவில் இரும்பு கம்பத்தால் ஆன மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம் நடுரோட்டில் உள்ளதால் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ஊருக்குள் திரும்பி வரும் வாகனங்களும், ஊருக்குள் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு வரும் வாகனங்களும் மிகுந்த சிரமத்துடன் ரோட்டை கடக்க வேண்டியுள்ளது.