மூணாறு, ஜன.20: மூணாறில் வாகன ஓட்டுனர்களுக்கு பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த டிவைடர்கள் அகற்றப்பட்டன.கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான மூணாறில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உதவியுடன் முக்கிய இடங்களில் டிவைடர்கள் பொருத்தப்பட்டன.இந்நிலையில் மூணாறில் சாலைகள் குறுகியதாக உள்ளதால் டிவைடர்கள் மூலம் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் விபத்தும் ஏற்பட்டது. மேலும் உயரம் கூடிய டிவைடர்கள் அமைக்கப்பட்டதன் காரணமாக பலத்த காற்று வீசும் போது பாதசாரிகள் மீது டிவைடர்கள் சரிந்து விழும் நிலை உருவானது.