வருசநாடு, ஜன.20: உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, வருசநாடு அருகே உள்ள தும்மக்குண்டு கிராமத்தில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.இப்பேரணிக்கு தும்மக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகு சின்னகாளை தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஊராட்சி செயலர் சின்னசாமி முன்னிலை வகித்தார். இதில் தூய்மை காவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதேபோன்று தும்மகுண்டு, வண்டியூர், வீரசின்னம்மாள்புரம், காமராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.