அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மரியாதை உள்ளிக்கோட்டையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

மன்னார்குடி, ஜன. 20: தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்நிலையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் திருவாரூர் மாவட்டத்தில் 873 இடங்களில் நடைபெற்றன. அதில் ஒரு பகுதியாக உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை கொடுத்து முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அபூவா தமிழன், ஒன்றிய குழு உறுப்பினர் மகதை பாரதிமோகன், திமுக ஊராட்சி செயலாளர் இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: