கரூர், ஜன. 19: கரூர் மாவட்டத்தில் 1.25லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 652.20 மிமீ. சராசரி அளவை விட குறைந்த அளவிலேயே மழை பெய்து வருகிறது. எனினும் பரவலாக பெய்து வரும் மழையைப் பயன்படுத்தியும், காவிரியாற்றில் வரும் நீரை பயன்படுத்தியும் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். நடப்பாண்டு கரூர் மாவட்டத்தில் 1.25 லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உணவு தானிய உற்பத்தி இலக்கினை சரியாக அடைந்திட ஏதுவாக சான்று பெற்ற நெல்ரக விதைகளான பிபிடி 5204, கோ 50, கோ 51, டிகேஎம் 13 ஆகியவை 113.37 டன், சிறுதானியங்கள் சோளம் சிஎஸ்வி 20, கே 12, குதிரைவாலி கோ 2, வரகு கோ 3 ஆகிய ரகங்கள் 3.87 டன், துவரை கோஆர்ஜி 7, உளுந்து விபிஎன் 5, விபிஎன் 6, கொள்ளு பிஒய் 2 மொத்தம் 32.28 டன், பயறு வகை விதைகள் மற்றும் நிலக்கடலை விதை ரகம் கே 6, கே 9, ட்டிஎம்வி 13, கோ 6. கோ 7 மற்றும் தாரணி ரகம் மொத்தம் 10.06 டன் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டது.