சாத்தூரில் 10 இடங்களில் சொட்டு மருந்து முகாம்

சாத்தூர், ஜன. 19:  சாத்தூர் நகராட்சிகமிஷனர் ராஜமாணிக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சாத்தூர் நகராட்சியில் இன்று (ஜன.19) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நகரில் உள்ள அண்ணாநகர் சத்துணவு மையம், நகராட்சி நீர்தேக்க தொட்டி சத்துணவு மையம், காமராஜபுரம் லிட்டில் பட்ஸ் நர்சரி பள்ளி, ஆக்ஸ்போர்டு பள்ளி, ராஜாமணி நாடார் கிருஷ்ணம்மாள் நடுநிலைப்பள்ளி, நகராட்சி தாய்சேய் நல விடுதி, அரசினர் மாணவர் விடுதி பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அரசினர் மருத்துவமனை என 10 இடங்களில் சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: