குஜிலியம்பாறை, ஜன. 19: குஜிலியம்பாறை அருகே பாளையம் ஏர்வாடிகளத்தூரை சேர்ந்தவர் மாரியப்பன் (32). கரூரில் தனியார் டெக்ஸ்டைல் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் பிச்சனம்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு டூவீலரில் சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். அரவக்குறிச்சி- சேர்வைக்காரன்பட்டி சாலையில் கம்புளியம்பட்டி அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாரியப்பன் டூவீலர் மீது மோதியது.