குஜிலியம்பாறை அருகே டூவீலர் விபத்தில் மேலாளர் பலி

குஜிலியம்பாறை, ஜன. 19: குஜிலியம்பாறை அருகே பாளையம் ஏர்வாடிகளத்தூரை சேர்ந்தவர் மாரியப்பன் (32). கரூரில் தனியார் டெக்ஸ்டைல் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் பிச்சனம்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு டூவீலரில் சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். அரவக்குறிச்சி- சேர்வைக்காரன்பட்டி சாலையில் கம்புளியம்பட்டி அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாரியப்பன் டூவீலர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்ததில் மாரியப்பன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து மாரியப்பன் தந்தை பெரியசாமி அளித்த புகாரின்பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: