ராமநாதபுரம், ஜன.14: ராமநாதபுரத்தில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் மகளிர் பிரிவில் கடலூர், ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணிகள் கோப்பையை வென்றன. ராமநாதபுரம் மாவட்ட வாலிபால் சங்கம், ஓஎன்ஜிசி இணைந்து பெரியார் ஓஎன்ஜிசி காவிரி கோப்பைக்கான 6ம் ஆண்டு மாநில அளவிலான போட்டி ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்கள் நடந்தது. இதில் அரியலூர், கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம் அணிகள் பங்கேற்றன. மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 27: 25, 18:25, 25:22 என்ற செட் கணக்கில் ராமநாதபுரம் அணியை, கடலூர் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. அரியலூர் அணி 3ம் இடமும், புதுக்கோட்டை அணி 4ம் இடமும் பிடித்தன.