விராலிமலையில் பொங்கல் விழா கொண்டாட்டம்

விராலிமலை, ஜன.14: விராலிமலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா பள்ளி வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கோலப்போட்டி நடனம், ஒயிலாட்டம், தப்பாட்டம், உழவின் சிறப்பு குறித்த பேச்சுரை உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் இணைந்து பொங்கல் வைத்தனர். விழாவில் பள்ளி தாளாளர் வெல்கம் மோகன், இயக்குநர் அருண்பிரசாந்த், தலைமையாசிரியர் சிவக்குமார், மேலாளர் மதனகோபால், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் தீபன்சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள உள்ளிட்ட அலுவலக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: