திங்கள்சந்தை அருகே வேன் கவிழ்ந்து ஐயப்ப பக்தர்கள் காயம்

திங்கள்சந்தை, ஜன.14: நாகர்கோவிலில் இருந்து திங்கள்சந்தை நோக்கி நேற்று காலை ஒரு வேன் சென்றுகெண்டிருந்தது. அதில் 25 ஐயப்ப பக்தர்கள் இருந்னர். இந்த வேன் கண்டன்விளை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையில் கவிழ்ந்தது. அதிர்ச்சியடைந்த வேனில் இருந்த ஐயப்ப பக்தர்கள் அலறினர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories: