முசிறி, ஜன.13: முசிறி அருகே அனுமதியின்றி செம்மன் கடத்திய 3 டிராக்டர், ஒரு பொக்லைனை வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். முசிறி அருகே வீரமணிப்பட்டி பகுதியில் பண்ணைக்குட்டையில் இருந்து செம்மண் கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி சப்-கலெக்டர் பத்மஜா, தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து ஆமூர் வருவாய் ஆய்வாளர் கண்ணன், ஆமூர் கிராம நிர்வாக அலுவலர் விஜய் ஆகியோர் வீரமணிப்பட்டி பகுதியில் உள்ள பண்ணைக்குட்டைக்கு போலீசாருடன் சென்றனர். அங்கு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் 3 டிராக்டர்களில் செம்மண்ணை கூலித்தொழிலாளர்கள் அள்ளிக்கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் பலர் தப்பி ஓடினர்.