கொடைக்கானல், ஜன. 12: கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை 10 ஆண்டுகளுக்கு பின் திமுக கைப்பற்றியது. முதல் பெண் தலைவராக சுவேதாராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு திமுக., அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் கூக்கால் ஒன்றிய கவுன்சிலராக திமுக வேட்பாளர் பூங்கொடி, வில்பட்டி ஒன்றிய கவுன்சிலராக திமுக வேட்பாளர் ராசிகா, பெரியூர் ஒன்றிய கவுன்சிலராக திமுக வேட்பாளர் சுவேதாராணி கணேசன், கே.சி.பட்டி ஒன்றிய கவுன்சிலராக திமுக வேட்பாளர் அபிராமி ஐயப்பன், மன்னவனூர் ஒன்றிய கவுன்சிலராக திமுக வேட்பாளர் முத்துமாரி சுரேஷ்பாண்டி, அடுக்கம் ஒன்றிய கவுன்சிலராக திமுக வேட்பாளர் கார்த்திக் ஆகியோர் வெற்றிெபற்றனர்.