கும்மிடிப்பூண்டி, ஜன. 12: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான தேர்தல், தேர்தல் அலுவலர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 30ம் தேதி நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 26 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மட்டும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குள் அனுப்பப்பட்டனர். அவர்களை கட்சி வாரியாக பிரித்து அதிமுகவினர் தனியாகவும், திமுகவினர் தனியாகவும் அமரவைக்கப்பட்டனர். இரு பக்கமும் தலா 13 பேர் இருந்ததால் வெற்றி பெறுவது யார் என்ற பதற்றமான சூழ்நிலை உருவாகியது. ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான வேட்பாளராக அதிமுக தரப்பில் கே.எம்.எஸ்.சிவக்குமார், திமுக தரப்பில் இந்திரா தனலட்சுமி அறிவிக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது அதிமுக வேட்பாளர் கே.எம்.எஸ்.சிவக்குமாருக்கு 13 ஓட்டும், திமுக வேட்பாளர் இந்திரா திருமலைக்கு 13 ஓட்டுகளும் பதிவாகி இருந்தது.