மரவேரில் சிக்கிய சிறுத்தை பத்திரமாக மீட்பு

கோவை, ஜன. 12: போளூவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட முள்ளியங்காடு பகுதியில் மர வேரில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பினர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘வழக்கமான ரோந்து பணியின்போது சிறுத்தை மரவேரில் சிக்கியிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் மரவேர் அகற்றப்பட்டு சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டது. சிறுத்தைக்கு உடலில் எந்தவித காயமும் ஏற்படவில்லை,’’ என்றனர்.

Related Stories: