கடை பூட்டை உடைத்து திருட்டு

திருவாடானை, ஜன. 10: திருவாடானை அருகே சி.கே. மங்கலத்தில் மியூசிக்கல் கடை பூட்டை உடைத்து லேப்டாப் மற்றும் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவாடானை அருகே உள்ளது சின்ன கீரமங்கலம். இங்கு சிவகங்கை மாவட்டம் சூரணத்தை சேர்ந்த கருப்பையா (42). இவர் மியூசிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார் இவர் நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டுச் சென்றார். வழக்கம்போல் நேற்று காலையில் திறக்க வந்தார். அப்போது கடை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரொக்கப்பணம் ரூ.20 ஆயிரம் மற்றும் 2 மடிக்கணினிகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து திருவாடானை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: