பரமக்குடி, ஐன. 10: பரமக்குடி அருகே சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பரமக்குடி அருகே உள்ள மேலாயக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன் (55). இவர் கடந்த 20 வருடங்களாக வெளிநாட்டில் பணியாற்றியவர். தற்போது, விவசாயம் செய்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுநீர் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை, பரமக்குடி முதுகுளத்தூர் சாலையில் உள்ள வனத்துறைக்கு பாத்தியப்பட்ட பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.