கீழக்கரை, ஜன. 10: கீழக்கரை தெற்குதெரு, புதுத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி சார்பில் பேவர் பிளாக் கற்கள் சாலை பல லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் பழுதானதால் அந்த கற்களை தோண்டி எடுத்துவிட்டு குடிநீர் குழாயை சரிசெய்த நகராட்சி நிர்வாகம் மீண்டும் அந்த இடத்தை மூடாமல் அப்படியே போட்டுவிட்டு சென்றது. இதனால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே நகராட்சி நிர்வாகம் உடைக்கப்பட்ட அந்த கற்களை மீண்டும் சரிசெய்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.