ஆவடி, ஜன.10: அம்பத்தூரில் நள்ளிரவில் அடகு கடையின் ஷட்டரை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், பெரியார் சாலையை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (42). இவர் வீட்டு முன் பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரமேஷ்குமார் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர், அவர் நேற்று காலை கடையை திறக்க வந்தார்.