காவல்துறைக்கு தெரிவிக்காமல் ரகசிய ரெய்டு

மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏதேனும் ரெய்டு நடத்தினாலோ, ஆக்கிரமிப்புகள் அகற்றினாலோ, போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும். ஆனால் நேற்று ஆர்டிஓ கணேஷ் தலைமையில் நடத்திய ரெய்டில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. ஆர்டிஓ தலைமையிலான அதிகாரிகளே ரகசிய ரெய்டு நடத்தினர். அப்போது ஒரு கடைக்கு சீல் வைக்க விடாமல் கடைக்காரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்த பின்னர் தான் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

Related Stories: