தொண்டி, ஜன. 9: தொண்டி அருகே உள்ள திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் தீர்த்த தெப்பக்குளத்தில் துணிகளை துவைப்பதால் அதன் புனிதம் கெடுவதாக புகார் எழுந்தள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் தீர்த்தின் புனிதத்தை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திறக்கு பாத்தியப்பட்டது திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில். விஷக்கடிக்கு தீர்வு கானும் தலமாக இது கருதப்படுகிறது. விஷ ஜந்துக்கள் கடித்ததால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இங்கு பக்தர்கள் தங்கி இங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி சென்றால் அனைத்து விதமான நோய்களும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதற்க்காக தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகின்றனர். இரவு தங்கி காலையில் தீர்த்தத்தில் நீராட சென்றால் அங்கு பெண்கள் துணிகளுக்கு சோப்பு போட்டு துவைத்து கொண்டிருக்கின்றனர். இது கடும் விரதமிருந்து வரும் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்துகிறது.