பரமக்குடி, ஜன.9: பரமக்குடியில் மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட. மத்திய தொழில் சங்கத்தைச் சார்ந்த 100 பேரை போலீசார் கைது செய்தனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்க கூடாது, குறைந்தபட்ச சம்பளமாக ரூ.21 ஆயிரம் வழங்க சட்டம் இயற்றவேண்டும். சம வேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியமாக மாதத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கவேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றக்கூடாது, நிர்ணயிக்கப்பட்ட கால பணி முறையை கைவிட வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளருக்கான சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.