மாமல்லபுரம், ஜன. 9: மாமல்லபுரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் உள்ள பாழடைந்த பயணிகள் நிழற்குடையில், விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. இதனால், அதனை உடனடியாக இடித்து விட்டு புதிதாக நிழற்குடை கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மாமல்லபுரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பஸ் பயணிகள் நிழற்குடை ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டது. ஆனால், அதனை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால், நிழற்குடையின் பல பகுதிகளி விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.மேலும், நிழற்குடையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இதில், நிழற்குடை அருகே பாம்பு, பூரான், தேள் உள்பட பல்வேறு விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பயணிகள் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர்.