கும்மிடிப்பூண்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து 6 பேர் காயம்

கும்மிடிப்பூண்டி, ஜன. 9 : கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வரும் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த அலமேலு (30), தண்டலம் பகுதியை சேர்ந்த உஷா (33), நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வி (30), பூவலை பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி (32), பெரியவேடு பகுதியை சேர்ந்த லில்லி (36) ஆகியோர் நேற்று வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு கும்மிடிப்பூண்டியில் இருந்து ஷேர் ஆட்டோவில் சென்றனர். எளாவூர் சோதனைச் சாவடி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் இருந்த டிரைவர் பாபு உள்ளிட்ட 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர்களை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: