காட்டுமன்னார்கோவில், ஜன. 9: காட்டுமன்னார்கோவிலில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தனித்தனியாக சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மணிவாசகம் தலைமையிலான சங்கத்தினர் காட்டுமன்னார்கோவில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்து தெற்கு வீதி சந்திப்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவஹர்லால் உத்தரவின்பேரில் ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட இந்திய விவசாய சங்கத்தினரை கைது செய்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அதே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.