சோழவரம் ஒன்றியத்தில் திமுக கவுன்சிலர்கள் பதவியேற்பு

புழல், ஜன. 7: சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஒன்றிய கவுன்சிலர்கள், 39 ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நேற்று அந்தந்த ஊராட்சிகளில் தலைவர்கள் ஊராட்சி உறுப்பினர்கள் அதிகாரிகள் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.  20 ஒன்றிய கவுன்சிலர்கள், 14 திமுக கவுன்சிலர்கள், ஒரு மதிமுக கவுன்சிலர், ஒரு பாமக கவுன்சிலர், ஒரு சுயேட்சை கவுன்சிலர் குறிப்பாக அதிமுக போட்டி கவுன்சிலர் ஒரே நேரத்தில் அதிகாரி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து 3 அதிமுக கவுன்சிலர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதேபோல், புழல் ஊராட்சி ஒன்றியத்தில் நான்கு ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். 7 ஊராட்சித் தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் அந்தந்த அலுவலகங்களில் பதிவு ஏற்றுக்கொண்டனர். அப்போது, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க சோழவரம், புழல் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories: