சேலம், ஜன.7: சேலம் அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சேலத்தை அடுத்த மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (38). இவரை கடந்த 2016ம் ஆண்டு மர்மநபர்கள் கொலை செய்தனர். இதுபற்றி அவரின் மனைவி சாந்தி, காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, இக்கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (29), அவரது தந்தை ராஜமாணிக்கம், உறவினர் கன்னியப்பன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். ஆனால், சேலம் மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் சக்திவேல் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக சாந்தி புகாரில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் போலீஸ்காரர் சக்திவேல் மீது காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு ஏதும் பதிவு செய்யவில்லை.