ராசிபுரம். ஜன.7: வெண்ணந்தூர் அருகே கோயிலுக்குள் புகுந்து மர்ம ஆசாமிகள் உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வெண்ணந்தூர் அருகே மின்னக்கல் பகுதியில் உள்ள அய்யனாரப்பன் சுவாமி கோயில் கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, தினசரி கோயிலில் பூஜை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் கோயிலை பூட்டி விட்டுச் சென்றனர். பின்னர், நேற்று காலை கோயிலை திறப்பதற்காக சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பூசாரி திடுக்கிட்டார். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.