திண்டுக்கல், ஜன. 7:திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் 9ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளதாக கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்திருப்பதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர்திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்புடன், ரூ.1,000 பணம் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 6,23,456 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற்று பயனடைய உள்ளனர். வரும் 9ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். தினமும் 200 முதல் 300 நபர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த விபரம் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.