பரமக்குடி, ஜன.3: பரமக்குடியில் கடந்த 2012ம் ஆண்டில் ரூ.1 கோடி செலவில் புதிதாக எரிவாய்வு தகனமேடை அமைக்கும் பணி தொடங்கியது. தனக மேடை அமைக்கும் போது இந்து மத சடங்குகளுக்கு எதிராக தகனமேடை அமைக்கப்பட்டதாக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனை சரி செய்ய கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறைகள் சரி செய்யப்பட்டு தகனமேடை திறக்கப்பட்டது. ஆனால் உடலை எரிக்க வரும் நபர்களிடம் கூடுதல் பணம் வசூல் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றது. சிவகங்கை, காரைக்குடி, மதுரை போன்ற ஊர்களில் உள்ள எரிவாயு தகனம் செய்ய ரூ.800 முதல் ரூ.1000 வரை மட்டுமே வசூல் செய்யபடுகிறது. ஆனால், பரமக்குடியில் கூடுதலாக ரூ.400 முதல் ரூ.800 வரை இறந்தவர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப பலித்த மட்டும் பணம் வசூல் செய்யப்படுகிறது. இதுகுறித்து பொதுநல அமைப்புகள் நகராட்சி மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.