கொள்ளிடம், டிச.31: இந்தியா வல்லரசாக வலியுறுத்தி, கோவில்பட்டியிலிருந்து டெல்லிக்கு செல்லும் சமூக ஆர்வலருக்கு கொள்ளிடத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜபரணிதரன் (42). இவர் இந்தியா வல்லரசாக வலியுறுத்தி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தன்று (ஜூலை 28ம்தேதி) கோவில்பட்டியிலிருந்து டெல்லிக்கு சைக்கிள் பயணத்தை தொடங்கினார். திருச்சி வந்த அவர் தொடர்மழை காரணமாக செப்டம்பர், அக்டோபர் 2 மாதங்களாக தனது பயணத்தை தற்காலிகமாக நிறுத்தினார். மீண்டும் தனது பயணத்தை நவம்பர் மாதம் 2ம் தேதியன்று மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழாவையொட்டி தஞ்சையிலிருந்து சைக்கிள் பயணத்தை துவங்கினார். இயற்கை சித்தா உணவுமுறை குழந்தை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.