நித்திரவிளை, டிச.31: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. இதையொட்டி மதுபான கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டு இருந்தார். இருப்பினும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் காட்டுக்கடை பகுதியில் ஒரு வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்து இருப்பதாக கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அதைத் தொடர்ந்து காட்டுக்கடையை சேர்ந்த ராஜனிடம் இருந்து 40 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.