பணகுடி,டிச.30: பணகுடி பகுதியில் இரவு நேரங்களில் மணல் கடத்தும் பணி ஜருராக நடைபெற்று வருகிறது. பணகுடி குத்திரபாஞ்சான் சாலையில் இருந்து கன்னிமார் தோப்பு பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் அதிகளவு தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து அதிகளவு மணலை காட்டாற்று வெள்ளம் ஒதுக்கியது. தற்போது இங்கு தேங்கி கிடக்கும் மணலை கடத்தும் பணி இரவு நேரங்களில் அதிகாரிகளின் துணையுடன் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இரவு முழுக்க முழுக்க ஜேசிபி இயந்திரம் முலம் வழித்தடங்கள் ஏற்படுத்தி பகல் நேரத்தில் அதை அழித்து விடும் நிலையில் காலை 6 மணி அளவில் சென்று பார்த்தால் அந்த பகுதிகளில் லாரிகள் டெம்போக்கள் சென்று வந்த தடங்கள் அதிகளவு காணப்படுகிறது.