பெண்ணை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் வெளியிட்டவர் கைது

கடையம், மே 15: ஆழ்வார்குறிச்சி அருகே செல்லபிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த சாத்தாகுட்டி மகன் சிவமுருகன் (22). சென்னையில் உள்ள தனியார் நகைக்கடையில் கேசியராக பணிபுரிந்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 33 வயது பெண்ணிடம் பழகி வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் கடையம் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப்பதிவு செய்து சிவமுருகனை கைது செய்தார்.

The post பெண்ணை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் வெளியிட்டவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: