பிரகாசபுரம் ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு

நாசரேத், மே 10: நாசரேத் அருகேயுள்ள பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில், விபிஎஸ் வகுப்புகள் 7 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு விழா ஆலய வளாகத்தில் நடந்தது. சேகர தலைவர் நவராஜ் தலைமை வகித்து ஜெபித்தார். பீரிடா நவராஜ் முன்னிலை வகித்தார். ஜேசிந்த், அபிஷா ஆகியோர் விபிஎஸ் இயக்குநர்களாக செயல்பட்டனர். கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வேதாகம தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் திரளானோர் கலந்துகொண்டனர். நல்லம்மாள் மார்க்கெட் நன்றி கூறினார். ஏற்பாடுகளை சேகர தலைவர் தலைமையில் சபை ஊழியர் ஸ்டான்லி, ஒருங்கிணைப்பாளர் பாக்கியவல்லி, ஆலய பாடகர் குழு பொறுப்பாளர் இமானுவேல், ஆலய பணியாளர் டிக்சன் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.

The post பிரகாசபுரம் ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: