திருச்சி, டிச.29: திருச்சி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு டிச.27 நடந்த நிலையில், மீதமுள்ள 8 ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கார்பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு டிச.30 (நாளை) நடைபெறவுள்ளது. லால்குடி ஒன்றியத்தில் 198 வாக்குச்சாவடிகளும், மண்ணச்சநல்லூர் 217, முசிறி 162, புள்ளம்பாடி 147, தாத்தையங்கார்பேட்டை 132, தொட்டியம் 171, துறையூர் 177, உப்பிலியபுரம் 133 வாக்குச்சாவடிகள் என 8 ஒன்றியங்களில் மொத்தம் 1,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.