மணப்பாறை அருகே பரபரப்பு வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைப்பு பஸ் நிலையத்தில் ஆண் உடல் மீட்பு

திருச்சி, டிச. 27: திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையம் உளளது. இந்த வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த கன்டோன்மென்ட் எஸ்ஐ சுலோச்சனா இறந்தவர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவரின் சட்டை பையில் இருந்த ஆதார் கார்டில் மதுரை கூடல் நகர் விளாங்குடியை சேர்ந்த மணி(51) என்ற பெயரும், முகவரியும் இருந்தது. இவர் எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: