வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில்

வேலூர், டிச.27: வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளர்களுக்கு கூடுதல் அறைகள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதில் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர், உதவி கமிஷனர், பொறியாளர், நகர்நல அலுவலர், கணக்கு பிரிவு, பிறப்பு, இறப்பு சான்று வழங்குமிடம், கணக்கு தணிக்கை பிரிவு, ஸ்மார்ட் சிட்டி திட்ட பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகிறது.

இதில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான உதவி பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அலுவலக பணிகள் மேற்கொள்வதற்காக போதிய இடவசதி இல்லை. எனவே மாநகராட்சி அலுவலகத்தில் முதல் மற்றும் 2வது தளங்களில் காலியாக உள்ள இடத்தில் புதியதாக கூடுதல் அறைகள் கட்டப்பட்டு வருகிறது.

Related Stories: