இறைவன் மனித குமாரனாக அவதரித்தார். சகல உலகத்தை படைத்த இறைவன் மனித சமுதாயத்தின்பால் தான் வைத்த எல்லையற்ற அன்பின் நிமித்தமாக இந்த பூமியிலே மனிதனாக அவதரித்த அந்த அதிசயமே கிறிஸ்துமஸ். அன்பே கடவுள். எவனிடத்தில் அன்பு இல்லையோ அவன் தான் படைத்த இறைவனை அறியான் என்பது வேதவாக்கியம். “இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவுமே இறைவன் இந்த பூமியிலே மனித குமாரனாக அவதரித்தார் என்ற வேத வாக்கியம் நம்மை தெளிவுபடுத்துகிறது. “தேவன் நம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் என்கிற இந்த வேத வசனம் அவருடைய விவரிக்க இயலாத அன்பை காட்டுகின்றது.