வாலாஜாபாத், டிச.25: மறைந்த முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 32வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு நேற்று அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையொட்டி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல், ஏக்கனாம்பேட்டை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.