திருவட்டாரில் சைக்கிளில் இருந்து தவறி கால்வாயில் விழுந்த சிறுவன் பலி

நாகர்கோவில், டிச.24: திருவட்டாரில் சைக்கிளில் இருந்து கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். திருவட்டார் அருகே சாய்க்கோடு, மேலவீட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சரவணன்(37). இவரது மூத்த மகன் ருத்ரஜித்(12). இவர் பரைக்கோடு பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சைக்கிளில் வீட்டின் அருகே உள்ள பார்வதி வாய்க்கால் அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ருத்ரஜித் பலியானார். இது தொடர்பாக தந்தை சரவணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: