தேவாரம், டிச.19: தேவாரம் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகாலையில் வாட்டி எடுக்கும் பனியால் முதியவர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.தேவாரம், டி.மீனாட்சிபுரம், அழகர்நாயக்கன்பட்டி, லட்சுமிநாயக்கன்பட்டி, டி.ரெங்கநாதபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலை காட்சியளிக்கிறது. இங்கு விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன.இங்கு மானாவாரி கப்பை, சோளம், மொச்சை, பயிரிடப்பட்டுள்ளது. இந்த விவசாய நிலங்களுக்கு அதிக அளவில் காலையில் விவசாயிகள் செல்வார்கள். மானாவரி நிலங்களில் தேவையான பராமரிப்பு பணிகளை செய்துவிட்டு மாலை நேரத்தில் திரும்புவார்கள். மார்கழி தொடங்கிவிட்டது. தற்போதோ நள்ளிரவு முதலே பனி வாட்டி எடுக்கிறது. இதனால் தோட்ட நிலங்களுக்கு அதிகாலையில் செல்வதை விவசாயிகள் தவிர்க்கின்றனர். இதேபோல் காலை நேரங்களில் தேவாரம் - போடி சாலை மற்றும் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள காட்டுப்பாதைகளில் வாக்கிங் செல்வதற்கு அதிகமான அளவில் நடைபயிற்சியாளர்கள் செல்வர்.